யாழில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைது

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்த சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையும் சோதனையிடப்பட்டது.

அங்கு தியாகி திலீபனின் உருவப்படம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இதையடுத்து சிற்றுண்டிச்சாலையை நடத்துபவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், அது தொடர்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.