எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறவிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை , பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.