பாலதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா! (Video)


வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நிகழ்வுகள் நேற்று(03) மிகவிமர்சையாக இடம்பெற்றது.

இவ் பெருவிழா நிகழ்வினை யாழ் மறை மாவட்ட பங்கு முதல்வர் ஆர்.ஜெயரட்ணம் தலைமையிலான அருட்சகோதார்கள் கலந்துகொண்டு பாலதீவு புனித அந்தோனியாருக்கான கூட்டுத்திருப்பலியினை நடாத்திவைத்தனர்.

இங்கு அந்தோனியாருக்கு கற்கருணை சிந்தனையுடான பூஜைகளும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

இவ் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் கடந்த 28 ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருச்சூருவ பவனியின் கூட்டுத்திருப்பலி பூஜைகள் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் இனிதே அந்தோனியாரின் பெருவிழா நிகழ்வு நிறைவடைந்தது.

இங்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் தமது படகு சேவைகளில் புனித அந்தோனியாரின் கற்கருணை பெற்றுச்சென்றனர்.

இதில் கடற்படையினார், அருட்சகோதர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள் – ரமணன்