தேர்தல் அன்று தாக்குதல் நடத்திய நபர் கைது

விசுவமடு, மாணிக்கபுர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தினத்தில் விசுவமடு பகுதியில் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த நபர் மீது தாக்குதள் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.