மாதகல் கடற்பரப்பில் கடத்தி செல்லப்பட்ட மூன்று அரை கிலோ தங்கமானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது (படங்கள் , வீடியோ)

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் கடத்தி செல்லப்பட்ட மூன்று அரை கிலோ தங்கமானது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு காங்கேசன்துறை லைற்கவுஸ் அண்மையில் 11மைல் கடற்தொலைவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்ட போதே அதில் இருந்து மேற்படி தங்கமானது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்பட்ட தங்கம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.