அனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்!

பிணை முறி அறிக்கை வெளியாகும்போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் மகேந்திரன், அவரின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைவரையும் உடன் கைது செய்ய வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (04.01) நடத்திய பொது எதிரணியின் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 
அவர் தெரிவித்தாவது- மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கிறோம்.