புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு மக்களால் கட்டப்பட்ட கலை அரங்கம் (வீடியோ)

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்து சிறப்பித்தார் .

புங்குடுதீவு வாழ் மக்களின் கலை கலாசார தொழில் பயிச்சிகளை மையமாக கொண்டு புலம்பெயர்து வாழும் புங்குடுதீவு மக்களினால் இந்த மண்டபம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இரண்டு புதிய கட்டிடங்களை உள்ளூர் மற்றும் கனடா வாழ் மக்களினால் அமைக்கப்பட்டு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டார்டர் சத்தியமூர்த்தி , டார்டர் ஸ்ரீகிருஷ்ண , பிரதேசபை உறுப்பினர்கள் என பலர்கலந்து கொண்டனர் .