O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை; 969 பேரின் பரீட்சை முடிவுகள் இரத்து

க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ளது.

2017 கபொத சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 563 பேர் தோற்றினர். 2804 பரீட்சை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இதில் 2798 முறைபாடுகள் விண்ணப்பதாரிகள் தொடர்பானதாகும். இதன்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 1829 பேர் இம்முறைபாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட பரீட்சை மோசடிகள் தொடர்பில் 969 பேரின் பரீட்சை முடிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.