சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

இஸ்ரேலிலுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக செல்வோர் தொழில் வாய்ப்பிற்கான காலஎல்லை முடிவடைந்தவுடன் உடனடியாக இலங்கைக்கு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலில் தங்கியிருப்போருக்கு எதிரான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.