மனைவி அடித்துக் கொலை: தூக்கில் தொங்கிய நிலையில் கணவன் மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனையில் நேற்று (18) மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

36 வயதுடைய கந்தசாமி வேதநாயகம் 29 வயதுடைய நீலகண்டன் யோகநாயகி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு குடும்பச் சண்டையிலேயே காரணமென அயலவர்கள் கூறுகின்றனர்.

மனைவி படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், கணவன் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.