கடும் மதுபோதை!! கல்வியங்காட்டில் நடுவீதியில் ஆட்டோவைக் கவிழ்ந்த காவாலி!!

சற்று முன் கடும் மதுபோதையில் அதிக வேகத்தில் வந்த ஆட்டோச் சாரதி  வீதியைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டியுடன் தனது ஆட்டோவை  மோதி கவிழ்த்துள்ளான். இச் சம்பவம் சற்று முன் யாழ் பருத்தித்துறை வீதியில் கல்வியங்காட்டு சந்தியில் பெற்றோல் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆட்டோச்சாரதி தனது ஆட்டோவை வீதியில் கவிழ்த்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியைத் தாக்க முற்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டோச்சாரதி சந்தி என்று தெரிந்தும் கவனிக்காது அதிக வேகமாக வந்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் தொர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.