பரந்தனில் இடம்பெற்ற விபத்து: 4 பேர் காயம் (படங்கள்)

பரந்தனில் நடைபெற்ற விபத்தில், படுகாயமடைந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று (12) காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் அதிவேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.