மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! சாதுர்யமாக செயற்பட்ட சாரதி (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பகுதியில், கதிர்காமத்திலிருந்து நல்லத்தண்ணி நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இ.போ.ச பேருந்து எதிரே வந்த கனரக வாகனம் ஒன்றிற்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே பாதையை விட்டு விலகி விபத்துகுள்ளாகியுள்ளது.

சாரதியின் சாமர்த்தியத்தினால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படாமல் பயணிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.