பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் புத்தளத்துக்கான தொடருந்து நிறுத்தம்!!

சிலாபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக புத்தளத்துக்கான கரையோரத் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலாபம், தல்வில ஊடாகக் கடலுக்குப் பாயும் கடுபிட்டி ஆறு நேற்றுப் பெருக்கெடுத்துள்ளது. அதையடுத்து தல்வில முகத்துவாரம் வெள்ளம் வடிந்தோட வசதியாக அகலமாக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி ஊடாகச் செல்லும் தொடருந்துத் தடத்தில் சேவைகளைளை மேற்கொள்வதில் அபாய நிலைமை காணப்படுகின்றது. அதனால் புத்தளத்துக்கான தொடருந்து சேவைகள் தற்போது சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.