முன்னாள் போராளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக மூதூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை, மனைவியுடனான முரண்பாட்டை அடுத்து இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளது.

இவர் 2004 ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.