காணாமல் போன மலேசிய வானூர்தி எங்கே- தேடுதலை நிறுத்த வேண்டாம்!!

2014 இல் காணாமல் போன மலேசிய வானூர்தியைத் தேடும் பணிகளை இடைநிறுத்த வேண்டாம் என்று பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசை கேட்டுள்ளனர்.

மலேசியாவின் எம்.எச் 370 வானூர்தியைத் தேடும் பணிகள் இன்றுடன் உத்தியோகபூர்வமாக முடிவடையும் நிலையிலேயே வானூர்தியுடன் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மலேசியாவின் புதிய போக்குவரத்து துறை அமைச்சர் வானூர்தியைத் தேடும் பணிகள் இடைநிறுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வானூர்தியின் சிதைவுகளை கடலிற்கு அடியில் தேடும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.