மோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர், கம்பஹா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கிதுல்கல, மல்வத்தப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.