வெற்­றி­லைக்­குள் கஞ்சா வச­மா­க மாட்டிய பெண் – செய்­வ­த­றி­யாது அந்­த­ரித்த மகள்!!

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குள் வெற்­றி­லை­யு­டன் கஞ்சா கொண்டு சென்­றார் என்ற குற்­றச்­சாட்டில் குடும்­பப் பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவர் யாழ்ப்­பா­ணம் நீத­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நடந்­துள்­ளது.

முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த இந்­தப் பெண் தனது பதின்­ம­வ­யது மக­ளு­டன் சிறைச்­சா­லைக்­குச் சென்­றுள்­ளார். அங்­குள்ள தனது கண­வ­ரைச் சந்­திக்­கவே அவர் சென்­றுள்­ளார். அப்­போது வெற்­றி­லைச் சரை­யும் கொண்டு சென்­றுள்­ளார்.

அந்த வெற்­றி­லைச் சரைக்­குள் கஞ்சா இருந்­த­தைச் சிறை உத்­தி­யோ­கத்­தர்­கள் கண்­டு­பி­டித்­த­னர். அவர் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ரு­டன் வந்த பதின்ம வயது மகள் கடும் இக்­கட்டு நிலையை அடைந்­தார். என்ன செய்­வது?, யாரு­டன் திரும்­பு­வது என்று தெரி­யாது அவர் அந்­த­ரித்­தார் என்று அங்­கி­ருந்­த­வர்­கள் கூறி­னர். கைது செய்­யப்­பட்ட பெண் நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.