துண்டான கையுடன் மருத்துவமனைக்குச் சென்ற மாணவன்- நடந்தது என்ன?

கையை வெளியே வைத்துக் கொண்டு பேருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் கை துண்டானது.

இந்தச் சம்பவம் பெல்மடுல்ல பிரதேசத்தில் நடந்துள்ளது.

பேருந்தின் அருகே பயணித்த பாரவூர்தியில் கைப் பகுதி மோதுண்டமை காரணமாக இவ்வாறு கை வேறாகத் துண்டிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவன் கையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.