கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண்: பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்பு

சிலாபம் பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட இந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் யார் என்பதை அடையாளம் காணமுடியாது உள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 38 வயதான இந்த பெண் ஏன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார் என்பது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.