வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று (05.06) பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் வசித்து வந்த இரவிச்சந்திரன் புனிதவதி என்ற 48வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயரே இன்று பிற்பகல் 4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவர் எற்கனவே வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளதுடன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். ஏற்கனவே நஞ்சருந்துவதற்கு முயற்சித்துள்ளார். எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.