வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!

வவுனியா மன்னார் வீதியில் இன்று (06.05.2018) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறு காயம் எற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியிலிருந்து வவுனியா நகருக்கு இன்று காலை 8 மணியளவில் சென்ற மோட்டார் சைக்கிள் மன்னார் வீதி, பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கையிலிருந்து மன்னார் வீதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதில் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிலுக்கும் சிறு சேதம் எற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதிக்கு போக்குவரத்துப் பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.