சட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்!!

சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி குளத்தில் மீன்பிடித்த மீனவர்கள் மூவர் இன்று காலை வவுனியா உழுக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வலைகளும், படகுகளையும் கைப்பற்றப்பட்டன என்று மாவட்ட தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து இலங்கை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகராசபை, மாவட்ட நீர் உயிரினச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருள்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.