புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் திடீர் மரணம்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் நேற்றையதினம் இரவு மாரடைப்பால் சாவடைந்தார்.

மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார் .