வாகன தண்டத்தை- பிரசே செயலங்களில் செலுத்தவும்!!

மோட்டார் வாகன தவறுகள் தொடர்பிலான தண்டப்பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச செயலகங்களில் இதற்கென தனியான பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக இந்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால எல்லை 14 நாள்களில் இருந்து 28 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு மாவட்ட மற்றும் வாகனப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தனர்.

தபால் ஊழியர்களின் பணிப் பணிப்புறக்கணிப்புக் காரணமாக இந்த தண்டப்பணத்தை தபால் அலுவலகங்களில் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைக் குறைத்துக் கொள்வதற்கான இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.