ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அதில் நான்கு தங்கச் சங்கிலிகள், தாலிக்கொடி என்பன திருடப்பட்டுள்ளன என்று ஒட்டுசுட்டான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை களை மேற்கொண்ட பொலிஸார் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த எட்டுப் பேரைக் கைது செய்தனர்.
தேர்த்திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
விழிப்படைந்த மக்கள் திருவிழாவில் பாதுகாப்புக் கடமையில் ஈடபட்டிருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சந்தேகத்தின் பேரில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.