படுத்துறங்கியபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூறுகள் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அகிலகுமார் நிலவன் (வயது–-20) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் முச்சக்கர வண்டிச் சாரதி.
திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அவர் படுத்துறங்கச் சென்றுள்ளார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
கோப்பாய் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறிய உடற்கூறுகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.