வவுனியா பூந்தோட்டம் பெரியார் குளம் கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு
இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை காடையர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் இச்சம்பவம் இன்று(06.07.2018) மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றினைந்து மது ரு ந்துவதாகவும் அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்
குறித்த சிலையானது கானாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் யாழில் உள்ள சாந்தியம் என்ற அமைப்புடன் இணைந்து கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தம் மனநிறைவிற்காக கட்டப்பட்ட சிலை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்