கொடிகாமத்தில்- வாள்வெட்டுக் குழு அடாவடி!!

வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அடாவடி செய்த வொள்வெட்டுக் குழு, வீட்டின் உரிமையாளரை வாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் கொடிகாமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த வீட்டின் உரிமையாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வடக்கில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படுத்துவற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.