யாழ் கோட்டையிலும் எலும்புக்கூடுகளா? உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றதா?

யாழ்ப்பாணம் கோட்டையின் மத்திய பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. இதன்போது ஞாயிற்றுக்கிழமை எலும்புத் துண்டுகள் சிலவும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

அவை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவராத வகையில் மூடிமறைகப்பபட்டுள்ளன என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்தே இந்த சந்தேகம் வெளியிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் தொடர்புகொண்ட போது, அவர்கள் தமக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை என மறுத்துவிட்டனர்.இந்த தகவலை தொல்பொருள் திணைக்களத்திடம் உறுதிப்படுத்த முயற்சித்த போதும் பதில் கிடைக்கவில்லை.