வடக்கு வந்தார் ரணில்- கிளிநொச்சியில் தானியக் களஞ்சியத்தைத் திறந்தார் !!

நிதி அமைச்சின் 185 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி தானியக் களஞ்சியசாலை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால்  இன்று உத்தியோக பூர்வமான திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றம் கருத்தி அமைக்கப்பட்ட இந்தக் களஞ்சியசாலையில் நெல்லை களஞ்சியப்படுத்திய விவசாயிகள் மூவருக்கும் அதற்கான சிட்டையையும் தலைமை அமைச்சர் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரட்ன,நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்டச் செயலர், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.