மனித எலும்புகளைத் தேடி- மீண்டும் அகழ்வுப் பணி!!

மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணி வளாகப் பகுதியில் இன்றுடன் 39 வது நாள்களாக மனித எலும்புக்கூடுகள் கொண்ட அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த இரு நாள்கள் விடுமுறை இடைவெளிக்குப் பின்னர் இன்று அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டது.

கண்டு பிடிக்கப்பட்ட மனித மண்டையோடுகள், எலும்புக்கூடுகள் ஆகியவற்றை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்று மேற்கொள்ளப்பட்டன.