சுகாதாரப் பிரிவினரின் சிபாரிசைத் தொடர்ந்து பிரதேச சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானத் துக்கமைய பெரும் பதுங்குகுழி கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
வலி.தென் மேற்கு பிரதேச மானிப்பாய் பட்டினத்தில் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள திறந்த வௌியரங்கிற்கு பின்புறமாக விடுதலைப் புலிகளால் பெரும் பதுங்குகுழி அமைக்கப்பட்டிருந்தது.
மழை காலங்களில் இப் பதுங்குகுழிக்குள் வௌ்ளம் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் உற்பத்தியாவதுடன் துர்நாற்றமும் வீசிவந்தது.
இந்த நிலை குறித்து சுற்றாடலில் வசிக்கும் மக்கள் சுகா தாரப் பிரிவினருக்கு முறையிட்டமையையடுத்து பதுங்குகுழியை நேரில் சென்று பார்வையிட்ட சுகாதாரப் பிரிவினர் பதுங்குகுழியை அழிக்கவேண்டிய அவசியம் குறித்து பிரதேச சபைக்கு சிபாரிசு செய்திருந்தனர்.
சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பிரதேச சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மா னத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பெரிய வாகனங்களின் உதவியுடன் பதுங்குகுழி அழிக்கப்பட்டது.
பதுங்குகுழியிலிருந்து மீட்கப்பட்ட பெரும் இரும்புப் கேடர்கள் இப்பிரதேசத்திலுள்ள மயானங்களின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தப்படுமென்று தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்துள்ளார்.