தேங்காய் பறிக்கச் சென்ற நபர் செய்த அசிங்கமான செயல்!

மொனராகலை, மெதகம, கொஹுகும்புர பிரதேசத்தில் 60 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த பெண்ணின் வீட்டில் குறித்த நபர் தேங்காய் பறிக்க வருபவர் என பொலிசார் கூறுகிறார்கள்.

குறித்த பெண் கழிப்பறைக்குச் சென்றவேளை குறித்த நபர் பலாத்காரமாக வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸாரின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரை பிபில நீதவான் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.