வீதியில் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்: சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சி!!

காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினால், சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த வானில் இருந்த நபர் வான் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் கதவில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.

அதேவேளை வேகமாக வந்த முச்சக்கரவண்டி குறித்த மாணவன் மீது ஏறிச் சென்றுள்ளது. இந்த காட்சிகள் நகரில் வர்த்தக நிலையத்தில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் அங்கிருந்தவர்களால் காத்தான்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீதியில் வாகனங்களை நிறுத்தி வைப்போர் சற்று அவதானமாக செயற்பட்டால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.