கீரிக்குப் பயிற்சி அளிக்கும் -இலங்கை இராணுவம்!!

வெடிபெருள்களைக் கண்டறிவதற்காக இலங்கை இராணுவத்தினர் கீரிக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொறியியல் படையின் கீழ் 14 ஆவது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு ஆயுத படைப்பிரிவின் கீழ் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சிக்காக இலங்கையில் உள்ள சாம்பல் நிறமுள்ள கீரிகளே பொருத்தமானவை என்றும், பெண் கீரிகளுக்குப் பயிற்சி அளித்தால் அது நன்மை தரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.