நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலி!!

மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற 5 பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது 4 நண்பர்களுடன் மகாவலி கங்கைக்கு குளித்தச் சென்ற போது குறித்த ஐவரில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மூவரையும் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலே குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த மாணவன் உயர் தரத்தில் கல்வி கற்கும் நாவலபிடி அப்புகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நாவலபிடி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.