வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- 22 பேர் அதிரடியாகக் கைது!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அண்மைக்கால வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.