அலுவலகத்தினுள் தூக்கில் தொங்கிய அதிகாரி!!

சிலாபம் பிரதேச சபையின் மாதம்பே பகுதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் அந்த அலுவலகத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த அலுவலகத்தின் அதிகாரிகளால் நேற்று மாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ளவர் சிலாபம் பிரதேச சபையில் களஞ்சியசாலை பொறுப்பாளராக கடமையாற்றிய 37 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் உணவு இடைவேளைக்கு பின்னர் குறித்த அதிகாரியை காணாததால் ஏனைய அதிகாரிகள் அவரை தேடியுள்ளனர்.

பின்னர் அவரின் தொலைபேசிக்கு அழைத்த போது களஞ்சியசாலை அறையில் இருந்து தொலைபேசியின் ஒலி கேட்டுள்ளது.

அதன் பின்னர் அறையை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.