வவுனியாவில் வீதியில் விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

வவுனியாவில் நாய் கடித்ததில் காயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, உக்கிளாங்குளம், நாவலர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 மற்றும் 5 வயது சிறுவர்களை அயல் வீட்டு நாய் கடித்ததில் காயமடைந்துள்ளனர்.

வீதியால் சென்றவர்கள் நாயை விரட்ட முற்பட்ட போது நாய் அவர்களையும் கடிக்க முற்பட்டது.

இந்நிலையில் வீதியில் ஒன்று கூடிய மக்கள் நாயை விரட்டியடித்துடன் காயமடைந்த இரு சிறுவர்களையும் மீட்டு வவுனியா வைத்தியாசலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.