இலங்கை தேசிய கால்பந்து அணியில் யாழ் வீராங்கணைகள் அறுவர்!!

பூட்­டான் தலை­ந­கர் திம்­பு­வில் இடம்­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தின் 15 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வி­ருக்­கும் இலங்கை கால்­பந்­தாட்டக் குழா­மில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆறு வீராங்­க­னை­கள் இடம்­பி­டித்­த­னர்.

தொட­ருக்­குச் செல்­ல­வுள்ள 23 பேர் கொண்ட குழா­மில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள வீராங்­க­னை­க­ளின் பெயர் விப­ரங்­களை நேற்­று­முன்­தி­னம் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னம் அறி­வித்­துள்­ளது.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த முன்கள வீராங்கனைகளான ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பின்கள வீராங்கனையான பாஸ்கரன் செயந்தினி ஆகியோரும், மகாஜனக் கல்லூரியின் பின்கள வீராங்கனையான எஸ்.தேவப்பிரியா, மத்தியகள வீராங்கனை யு.ஜோகிதா மற்றும் கோல் காப்பாளரான ஜெகநாதன் ஜெதுன்சிகா ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய அணியில் தமிழ் மாணவிகள் அதிகளவில் இடம்பிடித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.