தேசிய அடையாள அட்டை பெறுபவர்களுக்கு- கட்டணம் 100 ரூபா!!

முதன் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று உள்நாட்டு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மேலதிகமாக 100 ரூபா அறிவிடப்படப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.