யாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி!! ஒருவர் படுகாயம்!!

யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பக்கம் வந்த காருடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இச் சம்பவத்தில் எதிராக வந்த இன்னொரு மோட்டார் வண்டிச் சாரதியும் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.