நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!!

நல்­லூர் கோவில் திரு­வி­ழாக்­கா­லத்­தில் பின்­வ­ரும் சுகா­தார நடை­மு­றை­க­ளைத் தவ­றாது பின்­பற்­று­மாறு யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

1.உற்­சவ காலத்­தில் கோவிற் சுற்­றா­ட­லிலும் கோவி­லுக்­கு­வ­ரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக் கூடிய குடி­தண்­ணீர் மற்­றும் உண­வுப் பொருள்­கள் சுகா­தா­ர­மா­னவை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­வ­தோடு அது தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை 021 222 2645 என் னும் தொலை­பேசி இலக்­கத்­துக்கோ அல்­லது நல்­லூர்ப் பிர­தேச பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­க­ரின் அலை­பேசி இலக்­க­மான 0718628519 என்ற இலக்­கத்­துக்கோ தெரி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­ன்றீர்­கள்.

2. குழந்­தை­கள், சிறு­வர்­கள் விரும்பி உண்­ணும் இனிப்பு வகை­கள், சிற்­றுண்­டி­கள் சுகா­தா­ர­மற்ற முறை­யில் தயா­ரிக்­கப்­பட்டு அல்­லது விநி­யோ­கிக்­கப்­ப­டும் பட்­சத்­தில் உங்­கள் பிள்­ளை­க­ளின் ஆரோக்­கி­யத்­தைக் கருத்­திற்­கொண்டு அவற்றை வாங்­கிக் கொடுப்­ப­தைத் தவிர்ப்­ப­தோடு குறித்த தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தெரி­யப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

3. அதி­க­ள­வான சீனி (சிவப்பு,செம்­மஞ்­சள் ஒட்­டப்­பட்ட குடி­பா­னங்­கள் ) நிற­மூட்­டி­கள், சுவை­யூட்­டி­கள் சேர்க்­கப்­பட்ட ஆரோக்­கி­யத்­தைக் கொடுக்­கும் உண­வு­களை இயன்­ற­ள­வில் தவிர்த்துப் பிள்­ளை­க­ளின் நல­னைப் பாது­காத்­துக் கொள்­ளு­மாறு வேண்­டப்­ப­டு­கி­றீர்­கள்.

4. வீதி­யில் பரப்­பப்­பட்­டி­ருக்­கும் மண்­ணின் சுகா­தா­ரத்­தைப் பேணும் முக­மாக ஆலய சுற்­றா­ட­லில் வதி­யும் மக்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­களைத் திரு­விழா நாள்­க­ளில் வீதிக்கு வரு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மா­றும், கோவி­லுக்­கு­வ­ரும் அடி­ய­வர்­கள், தம்­மு­டன் தமது வளர்ப்பு நாய்­க­ளை அழைத்து ­வ­ரு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள். அறி­வு­றுத்­தல்­களை மீறும் பட்­சத்­தில் அவை கட்­டாக்­காலி நாய்­க­ளா­கக் கரு­தப்­பட்டு அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டும் அல்­லது நாய்­களைப் பதி­வுக்­கட்­ட­ணத்­தின் பிர­கா­ரம் சபை­யால் சட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும். அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பூச்சி மருந்தை நாய்­கள் உட்­கொள்­கின்­ற­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

5. கோவில் சுற்­றா­ட­லில் பிளாஸ்­ரிக் மற்­றும் பொலித்­தீன் பொருள்­களை எடுத்­து­வ­ரு­தல் முற்­றா­கத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்கு ஒத்­து­ளைப்பு வழங்­கு­மா­றும் பொது­மக்­கள் அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

6. அங்­கப்­பி­ர­தட்­ச­ணம் மற்­றும் அடி­ய­ளித்­தல் போன்ற நேர்த்­திக் கடன்­களை நிறை­வேற்­றும் அடி­ய­வர்­க­ளின் நன்மை கரு­தி­யும் மண்­ணின் சுகா­தா­ரத்­தைப் பேணும் வகையிலும் கோவில் சுற்­றா­ட­லில் (வெளி வீதித் தடைக்­குள்) பாத­ணி­கள் அணிந்து செல்­வதை முற்­றா­கத் தவிர்க்­கு­மா­றும் கோவில் வீதி­க­ளில் பரப்­பப்­பட்­டுள்ள மண­லின் மீதி­ருந்து உண­வுப் பொருள்­களை உண்­ப­தைத் தவிர்த்­துக் கொள்­ளு­மா­றும் (கச்­சான் கோது போடு­தல், கார உணவு மீதி­கள் படிந்த ரெஜி­போம் மற்­றும் பேப்­பர், பைகள் போடு­தல் போன்­ற­வற்­றைத் தவிர்த்­தல்) கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள். அவற்­றைக் கழி­வுத் தொட்­டி­க­ளில் இட்டு ஒத்­து­ழைப்பு நல்­கு­மா­றும் கேட்­டுக்­கொள்­கி­றோம்.

7. ஆல­யச் சூழ­லில் நட­மா­டும்­போது மக்­கள் கழி­வுப் பொருள்­களை வீச­வேண்­டிய சந்­தர்ப்­பங்­க­ளில் அவற்­றைத் தரம்­பி­ரித்து அதற்­கென வைக்­கப்­பட்­டுள்ள கழி­வுப் பொருள்­க­ளில் இடு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

8.திரு­வி­ழாக் காலங்­க­ளில் இயங்­கும் தற்­கா­லிக உணவு கையா­ளும் நிலை­ய­மாக அமை­யும் வியா­பார நிலை­ய­மா­னா­லும் உணவு கையா­ளும் நிலை­யத்­தின் அடிப்­ப­டைத் தன்­மை­கள் பூா்த்தி செய்­யப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­து­டன் உணவு கையாள்­வோர் தற்­கா­லிக அடிப்­ப­டை­யி­லே­னும் அனு­ம­தி­களை வைத்­தி­ருத்­தல் அவ­சி­யம். இந்த நடை­முறை இறுக்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். என்­ப­தை­யும் வலி­யு­றுத்­திக் கூறு­கி­றோம். மீறும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது தவிர்க்­கப்­பட முடி­யா­தது. அத­னால் நேர காலத்­து­டன் எமது பணி­ம­னையின் தலை­மைப் பொதுச் சுகா­தாரப் பரி­சோ­த­க­ரைத் தொடர்­பு­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள்.

9.ஆலயச் சுற்­றா­ட­லில் தற்­கா­லிக சுகா­தார நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும் பட்­ச­தி­தல் அவற்­றில் ஒலி­பெ­ருக்­கி­களைச் சத்­த­மாக அலற விடு­வதோ திரைப்­ப­டப் பாடல் இசைப்­ப­தையோ தவிர்த்து ஒத்துழைப்பு நல்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­டு­கி­றீர்­கள்.

10. வீடு­க­ளில் குறித்த தினங்­க­ளில் மட்­டும் தண்­ணீர்ப் பந்­தல் மற்­றும் அன்­ன­தான நிகழ்­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­கள் அவற்­றைச் சுகா­தார நடை­மு­றைக்கு அமைய நடத்­து­மா­றும் மீறும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளாக நேரி­ட­லாம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.

11. பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளில் டெங்கு நுளம்­பு­கள் பெரு­கா­த­வாறு சுற்­றா­ட­லைப் பேணு­வ­து­டன் திரு­வி­ழாவை முன்­னிட்டு பிற மாவட்­டங்­க­ளில் இருந்து தங்­கள் வீட்­டுக்கு வரு­கை­த­ரும் விருந்­தி­னர்­கள் காய்ச்­ச­லு­டன் வரும் பட்­சத்­தில் உரிய மேல­திக நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு (காய்ச்­ச­லுக்கு உட்­பட்­ட­வரை மருத்­துவ பரி­சோ­தனை செய்­தல், நுளம்பு வகை­களை உப­யோ­கிக்­கச் செய்­தல், நுளம்புக் கடியிலிருந்து ஒவ்­வோ­ரு­வ­ரை­யும் பாது­காத்­தல்,) உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

12. கோவில் சுற்­றா­டலிலும் மாந­கர சபை எல்­லைக்­குள்­ளும் பொது­மக்­கள் தமது வீட்­டுக் கழி­வு­களை வீதி­க­ளில் வீசி ஆல­யத்­துக்­கு­வ­ரும் பக்­தர்­க ­ளுக்கு அசெ­ள­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தாது சுற்­றுப்­பு­றச் சூழ­லில் சுகா­தா­ரம் பேண ஒத்­து­ழைப்பு வழங்குமாறு வேண்­டிக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

13. கோவிலுக்கு அண்­மித்த சூழ­லில் வதி­யும் பொது­மக்­கள் உற்­சவ காலத்­துக்கு முன்­பாக தங்­கள் வீட்­டுக் கிண­று­களை இறைத்­தும் நீர்த் தாங்­கி­க­ளைச் சுத்­தம் செய்­தும் வாராந்­தம் கிணற்­றுக்­குக் குளோ­ரின் இடு­வ­தற்கு சுகா­தார பகு­தி­யி­ன­ரின் உத­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள் – என்­றுள்­ளது.