வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், சைக்கிளில் பயணித்தவரை மோதித் தள்ளியது.
இந்த விபத்து மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்று காலை நடந்தது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன, வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீற் கற்குவியல் என்பவற்றை மோதித் தள்ளியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
காரை செலுத்திச் சென்றவரும், கூலித் தொழிலாளியும் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயங்களுக்குள்ளான கூலித் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.