வங்கியில் பெருந்தொகையான நகை, பணம் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்ற திருடன் வசமாக பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார்.
இந்தச் சம்பவம் குருநாலைப் பகுதியிலுள்ள ஒரு வங்கியில் இடம்பெற்றது.
வங்கியின் பூட்டை அல்லது கதவை உடைப்பது சிரமமான காரியம் என்பதால் ஒரு கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு இந்தத் திருடன் வங்கியினுள்ளே சென்றுள்ளான்.
மிகவும் திறமையாக அங்குள்ள பாதுகாப்புப் பெட்டகத்தையும் திறந்து பணம் நகை என சகலவற்றையும் எடுத்துக்கொண்டு வௌிறேய முயன்ற போது அங்கு அவனை வரவேற்க தயாராக பொலிசார் இருந்துள்ளனர்.
முதலில் அதிர்ச்சி, பின்னர் ஆச்சரியம் அடைந்த அந்த திருட னுக்குப் பின்னர்தான் ஒரு உண்மை விளங்கியது எப்படி பொலிசார் அவ்வ ளவு விரைவாக செயல்ப்பட்டனர் என்ற உண்மை.
அதாவது வங்கியுடன் பொலிஸ் நிலையத்திற்கு ஒரு அலா ரம் இணைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.