வீதியோரத்தில் அநாதரவாக கைவிடப்பட்ட மூதாட்டி!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் 80 வயது மதிக்கத்தக்க வயதான தாய் ஒருவர் இரவு வேளையில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த மூதாட்டி தள்ளாடிக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டுள்ளார். மறுநாள் காலை குறித்த மூதாட்டியிடம் ஊர் பொது மக்கள் சென்று விசாரித்துள்ளனர்.

இதன்போது தனது பெயர் அன்னபூரணி எனவும் தான் கொழும்பு – கொட்டாஞ்சேனை சந்தியில் உள்ள மாதா கோயிலை அண்டிய பகுதியில் வசித்ததாகவும் இரவு வேளையில் கார் ஒன்றில் கொண்டுவரப்பட்டு அனாதரவான நிலையில் இவ்வாறு விடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த மூதாட்டியை தெரிந்தவர்கள் 0776627853 மற்றும் 0757457851 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவரை தற்காலிகமாக பராமரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.