யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தீ வைத்து எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது.
யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில், இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பேருந்தின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், பேருந்தை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர்.
இதையடுத்து, சத்தத்தைக் கேட்டு வெளியே வந்த பேருந்து உரிமையாளரையும் அக்குழுவினர் தாக்குவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.