யாழில் வாய்த்தர்க்கத்தினால் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களிடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புளியம் கூடல் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரிப் போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புளியங்கூடல் இளைஞர்களுக்கும், நாரந்தனைப்பகுதி இளைஞர்களுக்கும் இடையிலேயே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிவடைந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

புளியங்கூடல் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த திடலில் நேற்றுப் போட்டிகள் இடம்பெற்றன.