இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!

இலங்கையின் சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எத்தனை வீதம் அதிரிக்கப்படும் என்பது குறித்து நிதி அமைச்சினால் கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.